கைகால்களைக் கட்டி கதற கதற அறுவை சிகிச்சையை மேற்கொண்ட காலத்தில் நோயாளிகளின் கதறல் சத்தத்தைக் கேட்டு வருந்திய 'சர் ஜேம்ஸ் சிம்சன்' அவர்கள், தனது 18 வயதிலேயே அறுவை சிகிச்சை நிபுணரானவர்... குளோரோஃபார்ம் எனும் மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தார். அதனை முதன்முதலாக ஒரு பிரசவ ஸ்திரீக்கு செலுத்தவும் அவள் வலியின்றி பிள்ளை பெற்று அந்த சந்தோஷத்தின் மிகுதியினால் அனஸ்தீஷியா என்றாளாம். எனவே அந்த பெயர் இன்றளவும் வழங்குகிறது. இத்தகைய சாதனையை செய்திட்ட ஜேம்ஸ் சிம்ஸன் தன் சொந்த மகளையே கொடிய வியாதிக்கு பலிகொடுத்த துக்கத்தின் மிகுதியினால் சோர்ந்திருந்த நேரத்தில் சிலுவையின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டார். மருத்துவத்தின் அரிய சாதனைகள் பலவும் ஆற்றிய அவரிடம் ஒருமுறை இவ்வாறு கேட்கப்பட்டது, 'உங்கள் கண்டுபிடிப்புகளில் சிறந்ததாக எதை நினைக்கிறீர்கள்' என்பதாக. அவர் சொன்னது, "என்னை நேசிக்கும் இரட்சகரை நான் கண்டுபிடித்ததே பெரும் சாதனை" என்றாராம். இன்றைக்கு மதபேதமின்றி உலகத்தார் பயன்படுத்தும் அரும்பொருளான அனஸ்தீஷியா எனப்படும் குளோரோஃபார்ம் மருந்தை கண்டுபிடித்தவர் கர்த்தருக்கு அஞ்சி நடந்த ஒரு தூயமனிதர் என்ற தகவல் நம்மை உற்சாகப்படுத்தட்டும்...!!!
www.sinegithan.in 1910ம் ஆண்டு கேரளாவில் ஹேட் என்ற ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 110 ஆண்டுகளுக்கு முன்னர் புலையர் இன மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை நேரடியாக கடைக்குள் சென்று வாங்க முடியாது. கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம் காசை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அந்தக் காசை ஒருவர் பெற்று கழுவி கடையில் தருவார். அவருக்குத் தேவையான பொருளை கடைக்காரர் ஒரு இலையில் கட்டி வீசி எறிவார். இது தான் நடைமுறை. தவறி யாரேனும் கடை அருகில் சென்றுவிட்டால் கட்டிவைத்து அடிப்பார்களாம். அப்படி இருந்த நிலையை இந்த புகைப்படம் நமக்கு ஆவணமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment