www.sinegithan.in 1910ம் ஆண்டு கேரளாவில் ஹேட் என்ற ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 110 ஆண்டுகளுக்கு முன்னர் புலையர் இன மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை நேரடியாக கடைக்குள் சென்று வாங்க முடியாது. கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம் காசை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அந்தக் காசை ஒருவர் பெற்று கழுவி கடையில் தருவார். அவருக்குத் தேவையான பொருளை கடைக்காரர் ஒரு இலையில் கட்டி வீசி எறிவார். இது தான் நடைமுறை. தவறி யாரேனும் கடை அருகில் சென்றுவிட்டால் கட்டிவைத்து அடிப்பார்களாம். அப்படி இருந்த நிலையை இந்த புகைப்படம் நமக்கு ஆவணமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.